டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஜே.பி. நட்டா…

 

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஜே.பி. நட்டா…

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தேசியக் கொடி ஏற்றினார்.

நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவா ஜே.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினார். மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினருக்கும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜே.பி. நட்டா டிவிட்டரில்:

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஜே.பி. நட்டா…
ஜே.பி. நட்டா

உங்கள் அனைவருக்கும் 72வது குடியரசு தின வாழ்த்துக்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவில் தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பெருமை ஆகியவற்றுக்கான நமது உறுதிப்பாட்டை அனைவரும் உறுதி செய்வோம். உங்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார்.

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஜே.பி. நட்டா…
விவசாயிகளின் டிராக்டர் பேரணி (கோப்புப்படம்)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திரும்பப் பெறவும் வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் இன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கியது. டெல்லி-ஹரியானா சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட டிராக்டர்கள் டெல்லியை வந்தடைந்தன. அதேசமயம், மத்திய டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் நுழையாவகையில் பல்வேறு தடுப்புகளை போலீஸார் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.