சமூக நீதி பற்றி பேச தி.மு.க-வுக்குஅருகதை இல்லை! – பா.ஜ.க முருகன் தாக்கு

 

சமூக நீதி பற்றி பேச தி.மு.க-வுக்குஅருகதை இல்லை! – பா.ஜ.க முருகன் தாக்கு

சமூக நீதி பற்றி பேச தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி, எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்துப்

சமூக நீதி பற்றி பேச தி.மு.க-வுக்குஅருகதை இல்லை! – பா.ஜ.க முருகன் தாக்கு

பேசுகிறார். இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு 15%. பழங்குடி மக்களுக்கு 7.5%. இந்த சதவீதம் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களைப் பொறுத்து வேறுபடும். தமிழகத்தில் மக்கள்தொகையின் அடிப்படையில் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு குறைந்தது 20% இருக்க வேண்டும். இந்த 20 சதவீதத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டியது யார்? தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக. இவர் துணை முதல்வராக ஆட்சியிலிருந்தார். அப்போது என்ன செய்துகொண்டிருந்தார். சமூக நீதி பற்றி பேசுவதற்கு தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை.

சமூக நீதி பற்றி பேச தி.மு.க-வுக்குஅருகதை இல்லை! – பா.ஜ.க முருகன் தாக்கு
கந்த சஷ்டி கவசத்தை மிகச்சிறிய கூட்டம் அருவருக்கத்தக்க வகையில் பேசியது. இன்று வரை அதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சரத்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? கறுப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்? ஸ்டாலின் அதனை விளக்க வேண்டும். இந்துக்களின் மனம் புண்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயம், இந்து சமுதாயம் இதற்கு எதிர்வினையாற்றும் என்பதை ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன்” என்று கூறினார்.