வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது… ராகுல் காந்தியை தாக்கிய பிரக்யா சிங் தாகூர்

 

வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது… ராகுல் காந்தியை தாக்கிய பிரக்யா சிங் தாகூர்

பிரபல பெண் சாமியாரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யா சிங் தாகூர் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்பவர். ஒரு சில சமயங்களில் அவரது கருத்தை பா.ஜ.க. கட்சி தலைமையே கண்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசபக்தனாக இருக்க முடியாது என மறைமுகமாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது… ராகுல் காந்தியை தாக்கிய பிரக்யா சிங் தாகூர்

பிரக்யா சிங் தாகூர் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தியா-சீனா மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்பது குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது: ஒரு வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி தார்மீக, நெறிமுறைகள் மற்றும் தேசபக்தியும் இல்லாதது. காங்கிரஸ் தனது காலரை பார்க்க வேண்டும். அந்த கட்சிக்கு பேச தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டவருக்கு பிறந்த ஒருவர் தேசபக்தனாக இருக்க முடியாது… ராகுல் காந்தியை தாக்கிய பிரக்யா சிங் தாகூர்

கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், நாம் கேட்டு வருகிறோம், மக்கள் சொல்கிறார்கள், செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன, லடாக் குடியிருப்பாளர்கள் சொல்கிறார்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் சீனா நம் நிலத்தை பறித்ததாக கூறுகிறார்கள். இது ஒரு இடத்தில் அல்ல மூன்று இடங்களில் சீனா நிலத்தை பறித்து விட்டது என பேசியிருந்தார்.