‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

 

‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளையெல்லாம் நம்பி பல்வேறு செயல்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று சாணத்தை பூசிக் கொள்வது. அண்மையில், குஜராத்தை சேர்ந்த சிலர் உடல் முழுவதும் சாணி மற்றும் கோமியத்தை பூசிக் கொண்டு குளித்த வீடியோ ஒன்று வைரலானது.

‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

இது போன்ற செயல்களை செய்தால், கால்நடைகளிடம் இருந்து நோய் பரவும் அபாயமும் கொரோனா பரவல் அபாயமும் இருப்பதாக எச்சரித்தனர். இந்த நிலையில், பாஜக எம்.பி பிரக்யா சிங் தான் தினமும் கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லையென கூறியிருக்கிறார். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரக்யா சிங் பங்கேற்றார். அந்த நிகழ்சியில் பேசிய அவர், நான் தினமும் கோமியம் குடிப்பதால் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு கொரோனா வரவில்லை. கோமியம் குடிப்பதால் நுரையீரல் பாதிப்புகள் சரியாகும். மக்கள் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டுமென கூறியுள்ளார்.

‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

மேலும், மக்கள் தங்களது வீடுகளில் துளசி, ஆலமரம் போன்றவற்றை வளர்த்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது என்றும் ஒரு கோடி மரங்கள் போபாலில் நடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் சிலர் கோமியம் குடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது பாஜக எம்.பியே கோமியம் குடிப்பதாக கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.