சோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும்… பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

 

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும்… பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

பா.ஜ.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் பெயர் போனவர். தற்போது வழக்கம் போல் ஒரு சர்ச்சையை கருத்தை கூறியுள்ளார். முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பர்வேஷ் வர்மா, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி நாட்டில் பீதி போன்ற சூழ்நிலையை உருவாக்குகிறது என குற்றச்சாட்டினார்.

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும்… பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

மேலும், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அவர்களே ஒரு வைரஸ், தொற்றுநோய் முடியும் வரை அவர்களை தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும். லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதல், நாட்டு மக்கள் அனைவரும் நமது பிரதமர் ஆதரவு அளிக்கிறார்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் இதர விஷயங்களை இழந்தபோதிலும் கடந்த 2 மாதங்களாக தங்களது வீடுகளில் அமர்ந்து இருக்கிறார்கள். இது ஒரு அவசரநிலை, ஆனால் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தி ஒரு குடும்பம் நாட்டில் ஒரு பீதி போன்ற சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும்… பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு

அவர்கள் மக்களை வழிதவறச் செய்து மனதில் பயத்தை உருவாக்குகிறார்கள். எனவே கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடியும் வரை அந்த மூவரையும் தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும் என்று நான் சொன்னேன் என தெரிவித்தார். பர்வேஷ் வர்மா இதற்கு முன், ஷாகீன் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருப்பவர்கள் மக்களின் வீட்டுக்குள் புகுந்து நமது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்வார்கள், அவர்களை கொன்று விடுவார்கள் என சர்ச்சை கூறிய கருத்தை கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.