நக்சல்கள் உங்க மாநிலத்துல தாக்குதல் நடத்துறாங்க.. நீங்க இங்க பிரசாரம் செய்றீங்க.. பா.ஜ.க. ஆவேசம்

 

நக்சல்கள் உங்க மாநிலத்துல தாக்குதல் நடத்துறாங்க.. நீங்க இங்க பிரசாரம் செய்றீங்க.. பா.ஜ.க. ஆவேசம்

சத்தீஸ்கரில் நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் வேளையில் இங்க நீங்க தொடர்ந்து பிரசாரம் செய்றீங்க என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலே அசாம் பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் தார்ரேம் அருகே கடந்த சனிக்கிழமையன்ற பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தற்கு மத்திய உள்துறை அமித் ஷா நேற்று இரங்கல் தெரிவித்தார். மேலும், சி.ஆர்.பி.எப்.-ன் இயக்குனர் ஜெனரலை அந்த பகுதிக்கு சென்று நிலைமை ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.

நக்சல்கள் உங்க மாநிலத்துல தாக்குதல் நடத்துறாங்க.. நீங்க இங்க பிரசாரம் செய்றீங்க.. பா.ஜ.க. ஆவேசம்
நக்சல்கள் தேடுதல் வேட்டையில் வீரர்கள்

சத்தீஸ்கரில் நக்சல்களால் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட வேளையில், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அசாமில் தீவிரமாக பிரசாரம் செய்து கொண்டு இருந்தார். பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்த பிறகும் பூபேஷ் பாகல் அசாமில் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. பூபேஷ் பாகலின் இந்த செயலை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க. எம்.பி. திலீப் சாய்கியா இது தொடர்பாக கூறியதாவது:

நக்சல்கள் உங்க மாநிலத்துல தாக்குதல் நடத்துறாங்க.. நீங்க இங்க பிரசாரம் செய்றீங்க.. பா.ஜ.க. ஆவேசம்
பூபேஷ் பாகல்

பல பாதுகாப்பு படையினர் தங்களது உயிரை இழந்த நேரத்தில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அசாமில் தேர்தல் நேரத்தில் மிகவும் பிசியாக உள்ளார். இங்கு அவர் அரசு அதிகாரிகளுடன் முகாமிட்டு அரசு அமைப்பை தவறாக பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். வீரர்கள் கொல்லப்பட்டத குறித்து பூபேஷ் பாகல் கவலைப்படவில்லை. சத்தீஸ்கர் மீதான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் அசாமில் முகாமிட்டுள்ளார். கடமையில் இருக்கும்போது உயிர் நீத்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினருடன் நாம் நிற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.