நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… பிரதமர் மோடியை வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… பிரதமர் மோடியை வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பா.ஜக.. எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சிறந்த சுதந்திர போராட்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நம் நாடு உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டுமானால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே என முடிவு செய்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கியலரே எதிர்த்து தாக்குதல் நடத்தினார். 1945 ஆகஸ்ட் 18ம் தேதியன்று நேதாஜி பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்து விட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால் இன்று வரை அவருடைய மரணம் மர்மமாகவே உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… பிரதமர் மோடியை வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.
அனில் பிரோஜியா

ஆண்டு தோறும் ஜனவரி 23ம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள். ஆகையால் இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது கொடுங்க… பிரதமர் மோடியை வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.
பிரதமர் மோடி

மத்திய பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டம் அலாட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் அனில் பிரோஜியா. இவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், சின்னமாக திகழும் சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸூக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.