மம்தா ஒரே ஒர நல்ல காரியம்.. அலிப்பூர் சிறைக்கு பெயிண்ட் அடித்ததுதான்… பா.ஜ.க. எம்.பி. கிண்டல்

 

மம்தா ஒரே ஒர நல்ல காரியம்.. அலிப்பூர் சிறைக்கு பெயிண்ட் அடித்ததுதான்… பா.ஜ.க. எம்.பி. கிண்டல்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்த ஒரே ஒரு நல்ல காரியம் அலிப்பூர் சிறைக்கு பெயிண்ட் அடித்ததுதான். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அங்குதான் இருப்பார்கள் என்று பா.ஜ.க. எம்.பி. கிண்டல் அடித்தார்.

மேற்கு வங்கம் மகிஷாதலில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.பி. பாபுல் சுப்ரியோ பேசுகையில் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் ஒரு மோசமான கட்சி. அந்த கட்சியை முழுமையாக ஊதி தள்ள அதனை நோக்கி ஒரு புயல் வந்து கொண்டு இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசிலிருந்து எங்க கட்சியில் சேர்ந்தவர்கள் ஒரு குடும்பமாக கடுமையாக பணியாற்றும்படி வலியுறுத்துகிறேன்.

மம்தா ஒரே ஒர நல்ல காரியம்.. அலிப்பூர் சிறைக்கு பெயிண்ட் அடித்ததுதான்… பா.ஜ.க. எம்.பி. கிண்டல்
பாபுல் சுப்ரியோ

தீதி (மம்தா பானர்ஜி) செய்த ஒரே நல்ல செயல், அலிப்பூர் மத்திய சிறைக்கு ஊதா மற்றும் வெள்ளை வர்ணம் பூசியதுதான். இன்னும் கொஞ்சம் நாள் கழித்து உங்க (திரிணாமுல் காங்கிரஸ்) தொண்டர்கள் அனைவரும் அங்கு உள்ளே இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உறவினர் அபிஷேக் பானர்ஜி பல ஊழல்களை நடத்துகிறார். கால்நடை கடத்தல்காரர்களுக்கும், அபிஷேக் பானர்ஜிக்கும் பாலமாக வினய் மிஸ்ரா உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மம்தா ஒரே ஒர நல்ல காரியம்.. அலிப்பூர் சிறைக்கு பெயிண்ட் அடித்ததுதான்… பா.ஜ.க. எம்.பி. கிண்டல்
ஆலிப்பூர் மத்திய சிறை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருப்பவர் வினய் மிஸ்ரா. கடந்த சில தினங்களுக்கு முன், கால்நடைகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சுரங்கம் வழக்கு தொடர்பாக, வினய் மிஸ்ராவுக்கு சொந்தமான பல இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இந்த சூழ்நிலையில்தான் மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியையும், வினய் மிஸ்ராவையும் தொடர்புபடுத்தி பாபுல் சுப்ரியோ பேசியுள்ளார்.