முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி!

 

முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி!


ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உட்பட்ட அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு, பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகிறார்.

முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி!

இதன் ஒரு பகுதியாக, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, அரச்சலூர், வடுகபட்டி, கொல்லன் கோவில், சிவகிரி ஆகிய பேரூராட்சிகளின் அலுவலக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், எம்.எல்.ஏ., சி.கே.சரஸ்வதி கலந்துகொண்டு, முன்கள பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி துணைத் தலைவர் கலைச்செல்வன், அதிமுக மொடக்குறிச்சி ஒன்றிய சேர்மன் கணபதி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.