“மத்திய அரசின் திட்டங்களை, திமுக தங்களுடையது என பொய் பிரச்சாரம் செய்கிறது” – பாஜக எம்எல்ஏ சரஸ்வதி புகார்!

 

“மத்திய அரசின் திட்டங்களை, திமுக தங்களுடையது என பொய் பிரச்சாரம் செய்கிறது” – பாஜக எம்எல்ஏ சரஸ்வதி புகார்!

ஈரோடு

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும், திமுக அரசு தங்களுடையது என பொய் பிரச்சாரம் செய்வதாக மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி குற்றம்சாட்டி உள்ளார்.

ஈரோடு பாஜக தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சரஸ்வதி கூறுகையில், “கடந்த 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வித சலுகைகளும் வழங்காமல் கிடப்பில் போட்டன. 2016ல் பாஜக வந்த பிறகு உயர் நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீத இடஒதுக்கீடு வாங்கி தந்துள்ளது”.

“இதேபோல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மத்திய மோடி அரசு மூலம் பெறப்பட்டு உள்ளது. சமூகத்தில் அனைத்து சலுகைளும், அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் இதுபோன்ற சட்டத்தை பெற்று தந்துள்ளார். இச்சட்டங்கள் பிராமணர்களாக செய்யும் சலுகை என்று திமுக அரசு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது”.

“மத்திய அரசின் திட்டங்களை, திமுக தங்களுடையது என பொய் பிரச்சாரம் செய்கிறது” – பாஜக எம்எல்ஏ சரஸ்வதி புகார்!

“தற்போது அறிவித்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீத இடஓதுக்கீடு உட்பட தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தும், திமுக அரசு தங்களுடையது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் மோடி அரசால் வழங்கப்பட்டது”.

“இந்தியாவிலேயே மொடக்குறிச்சி தொகுதியில் தான் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இதனை நன்கு புரிந்து கொண்டதால் இனி தமிழக மக்கள் பாஜக பக்கம் தான் இருப்பார்கள்” என்றார்.