கொரோனாவை விரட்ட கோமியம் குடித்த பாஜக எம்எல்ஏ… மக்களும் குடிக்க அறிவுறுத்தல்!

 

கொரோனாவை விரட்ட கோமியம் குடித்த பாஜக எம்எல்ஏ… மக்களும் குடிக்க அறிவுறுத்தல்!

கொரோனா கொடூரமான உயிர்க்கொல்லியாக மாறிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும் என ஆய்வுகள் கூறுகின்றன. தினசரி பலியானோரின் எண்ணிக்கையோ 4 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது. மனிதகுலத்துக்கே பேரழிவாக மாறியிருக்கக் கூடிய கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று அறிவியல் வல்லுநர்கள் அறுதியிட்டு சொல்கின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசும் அதைத் தான் வலியுறுத்தி வருகிறது.

கொரோனாவை விரட்ட கோமியம் குடித்த பாஜக எம்எல்ஏ… மக்களும் குடிக்க அறிவுறுத்தல்!

ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு பிரதமர் மோடி சொல்வதில் நம்பிக்கை இல்லை என்பது போலவே செயல்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது. தடுப்பூசியெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பசு, பசு கோமியம் ஆகியவை மட்டுமே. எந்த நோய் வந்தாலும் அதை விரட்ட கோமியம் குடித்தால் போதும் என மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

கொரோனாவை விரட்ட கோமியம் குடித்த பாஜக எம்எல்ஏ… மக்களும் குடிக்க அறிவுறுத்தல்!

பிரதமர் மோடி இவர்களையெல்லாம் கண்டுகொள்வாரா, மாட்டாரா அல்லது வேண்டுமென்றே பொய்ச் செய்தியைப் பரப்ப துணைபுரிகிறாரா என்ற கேள்வி தன்னியல்பாகவே எழுகிறது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போதே மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், கொரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும் என்றார். தற்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங் கோமியம் குடித்தே காட்டிவிட்டார்.

அதை வீடியோ எடுத்து தனது உடல்நலம் சீராக இருப்பதற்குக் கோமியம் தான் காரணம் என்று வேறு சொல்கிறார். கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் கோமியம் குடிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறார். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்களில் இந்த வீடியோ கண்ணில் படாமல் இருந்தால் நலம்.