ஆ.ராசாவின் பிறப்பு பற்றி இழிவாக பேசிய பா.ஜ.க பிரமுகர் மீது போலீசில் புகார்!

 

ஆ.ராசாவின் பிறப்பு பற்றி இழிவாக பேசிய பா.ஜ.க பிரமுகர் மீது போலீசில் புகார்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பிறப்பு பற்றி இழிவான கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க பிரமுகர் முருகானந்தம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா தனியார்

ஆ.ராசாவின் பிறப்பு பற்றி இழிவாக பேசிய பா.ஜ.க பிரமுகர் மீது போலீசில் புகார்!

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவே, ஆ.ராசாவுக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்களை பா.ஜ.க நிர்வாகிகள் பரப்பி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த அகில இந்திய பா.ஜ.க இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம், ஆ.ராசாவின் பேட்டி பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

http://

“உங்கள் பிறப்பு அப்படி” என்று அவதூறான பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். இது எதிர்ப்பைக் கிளம்பவே, கருத்து சாதி ரீதியான தாக்குதலாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவிக்கவே “உடன்பிறப்பு அப்படி” என்று திருத்தி மற்றொரு பதிவை வெளியிட்டார். அதே நேரத்தில் பிறப்பு அப்படி என்று விஷமத்தனமாக விமர்சித்த முதல் பதிவை அவர் நீக்கவில்லை.

http://


இது தொடர்பாக ஆ.ராசா போலீசில் புகார் செய்ய வேண்டும்,

ஆ.ராசாவின் பிறப்பு பற்றி இழிவாக பேசிய பா.ஜ.க பிரமுகர் மீது போலீசில் புகார்!

ஆ.ராசா புகார் செய்தால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தி.மு.க எம்.பி பற்றி இழிவாக ட்விட்டரில் பதிவிட்ட ஏ.பி.முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தி.மு.க சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.