இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்: எல்.முருகன்

 

இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்: எல்.முருகன்

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 5 எம்பி சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக -அதிமுக உடனே கைகோர்த்தது. இதனிடையே வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தவண்ணம் உள்ளது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்: எல்.முருகன்

இந்நிலையில் மாவட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “இன்னும் ஆறு மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நாம் கை காட்டுபவர்கள் தான் 2021ல் ஆட்சிக் கட்டிலில் அமர போகிறார்கள். நமது எண்ணம், செயல்பாடு, நோக்கம் அனைத்தும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பும் வகையில் இருக்க வேண்டும். எந்த ஒரு மாவட்ட தலைவர் சட்டசபைக்கு பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து அனுப்புகிறாரோ அவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்” எனக் கூறினார்.