பாஜகவினர் வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு தொடங்கியது!

 

பாஜகவினர் வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு தொடங்கியது!

முருகப்பெருமானை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்தை எதிர்த்து, பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் இன்று முருகனை வழிபடும் விதமாக தமிழகம் முழுவதிலும் வீடுகளில் வேல்பூஜை நடத்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி பாஜகவினர் வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்தசஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு தி. நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் உள்ள தன்னுடைய இல்லத்தில் முருக வேலுக்கு பூஜை செய்கிறார். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்,  தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “அனைத்து தரப்பு மக்களின் வீடுகளில் வேல் பூஜை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி உலக முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கறுப்பர் கூட்டம் சம்மந்தப்பட்டவர்களை அரசு கைது செய்துள்ளது வரவேற்க தக்கது. ஆனால் கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் உள்ளவர்களை விசாரிக்க வேண்டும். கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் இன்று வரை கண்டிக்கவில்லை. அவரின் நிலைபாடு என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: பாஜகவினர் வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு தொடங்கியது!