கவலையோ, சந்தோஷமோ இல்லை : எல்.முருகன்

 

கவலையோ, சந்தோஷமோ இல்லை : எல்.முருகன்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று பாஜக தலைவர் எல்,முருகன் தெரிவித்துள்ளார்.

கவலையோ, சந்தோஷமோ இல்லை : எல்.முருகன்

தமிழக தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நேர்காணலும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணியை பொருத்தவரையில் 170 இடங்கள் அல்லது அதற்கும் மேலாக அதிமுக நிற்க முடிவு செய்துள்ளது. அதேபோல் பாமகவுக்கு 23இடங்கள் ,பாஜகவுக்கு 20 இடங்கள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது ,தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் தமாகா-வுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவலையோ, சந்தோஷமோ இல்லை : எல்.முருகன்

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கவலையோ சந்தோஷமும் ஒன்றுமில்லை. ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் எங்களுடைய இலக்கு வெற்றியாகத்தான் இருக்கும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம். பாஜக போட்டியிடும் தொகுதிகள் , வேட்பாளர்கள் குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.