‘சென்னையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா’ : பாஜகவினர் உற்சாகம்!

 

‘சென்னையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா’ : பாஜகவினர் உற்சாகம்!

நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரவாயல் புறப்பட்டார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். அண்மையில் சென்னை வந்திருந்த அமித்ஷா, அரசு விழாவில் பங்கேற்று தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி படுத்திவிட்டுச் சென்றார். தற்போது தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமித்ஷா மீண்டும் சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரது பயணம் தடைபட்டதாக தமிழக பாஜக தலைமை அறிவித்தது.

‘சென்னையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா’ : பாஜகவினர் உற்சாகம்!

இதைத் தொடர்ந்து தான், துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னை வரும் அவர், பாஜக சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

‘சென்னையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா’ : பாஜகவினர் உற்சாகம்!

இந்த நிலையில், டெல்லியில் இருந்து ஜே.பி. நட்டா தனி விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், இல. கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் பாஜகவினர் நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக தொண்டர்களின் சிறப்பான வரவேற்பை ஏற்று திறந்தவெளி வாகனத்தில் “நம்ம ஊரு பொங்கல்” விழாவில் கலந்துகொள்ள நட்டா மதுரவாயல் புறப்பட்டதாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஜே.பி.நட்டா துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.