“இதை செய்ய தயாரா நிதியமைச்சரே?” – பிடிஆருக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!

 

“இதை செய்ய தயாரா நிதியமைச்சரே?” – பிடிஆருக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!

ஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு புதிய பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதனை நம்பித்தான் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர்.

“இதை செய்ய தயாரா நிதியமைச்சரே?” – பிடிஆருக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!

ஆட்சிக்கு வருவதற்கு முன் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், பெட்ரோல், டீசல் மீது அதிகமான வாட் வரியை விதிக்கிறது. திமுக அரசு பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குற்றஞ்சாட்டுகிறது. மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது.

“இதை செய்ய தயாரா நிதியமைச்சரே?” – பிடிஆருக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா என்று கேட்க விரும்புகிறேன். திமுகவின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதிமுகவின் இந்தப் போராட்டத்தை பாஜக வரவேற்கிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்துள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை” என்றார்.