‘தமிழகம் முன்னேறக் கூடாது என நினைக்கும் ஒரே கட்சி திமுக’: எல்.முருகன் குற்றச்சாட்டு!

 

‘தமிழகம் முன்னேறக் கூடாது என நினைக்கும் ஒரே கட்சி திமுக’: எல்.முருகன் குற்றச்சாட்டு!

விருதுநகரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், மத்திய அரசின் திட்டங்களால் தமிழர்கள் தான் அதிகம் படை பயனடைந்துள்ளனர். 50 ஆண்டுகால தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை நரேந்திர மோடி பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல, 2015ம் ஆண்டு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த கோரிக்கையை பற்றி கேட்டறிந்தார் என்று கூறினார்.

‘தமிழகம் முன்னேறக் கூடாது என நினைக்கும் ஒரே கட்சி திமுக’: எல்.முருகன் குற்றச்சாட்டு!

தொடர்ந்து காங்கிரசும் திமுகவும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழகம் முன்னேற கூடாது என்று நினைக்கும் ஒரே கட்சி திமுக தான் என்றும் தமிழகத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் தமிழ் கடவுள்களுக்கும் எதிரானவர்கள் திமுக என்றும் கடுமையாக சாடினார்.

மேலும், பாஜக வேல் யாத்திரையை தொடங்கி இடத்திலேயே ஸ்டாலின் தனது கையில் வேலை பிடித்திருக்கிறார் என்றும் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் திமுகவினரும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.