“ஏன்யா இதெல்லாம் ஒரு தலைவன் செய்ற வேலையா?” – ‘முன்னாள் தலைவன்’ ராகுலை வறுத்தெடுத்த குஷ்பு!

 

“ஏன்யா இதெல்லாம் ஒரு தலைவன் செய்ற வேலையா?” – ‘முன்னாள் தலைவன்’ ராகுலை வறுத்தெடுத்த குஷ்பு!

தமிழ்நாட்டில் பொழிவிழந்து போயிருக்கும் காங்கிரஸுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி உற்சாக பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். சாலையோரக் கடைகளில் சாப்பிடுவது, மீனவர்களுடன் நீந்துவது, மாணவர்களுடன் ஜாலியாக உரையாடுவது என எங்கு சென்றாலும் அந்த கேரக்டாராகவே மாறி ராகுல் காந்தி அசத்திவருகிறார். இதன்மூலம் மக்களோடு மக்களாகத் தான் இருப்பதாகவும் எளிமையாக உள்ளதாகவும் காட்டிக்கொள்கிறார்.

“ஏன்யா இதெல்லாம் ஒரு தலைவன் செய்ற வேலையா?” – ‘முன்னாள் தலைவன்’ ராகுலை வறுத்தெடுத்த குஷ்பு!

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜூடோ, நடனம், தண்டால் என அசத்தினார். அப்போது அவருக்குப் போட்டியாக தண்டால் எடுக்கவந்த மாணவியுடன் போட்டிப் போட்டுக்கொண்டு ஒரு கையால் தண்டால் எடுத்து மிரட்டினார். இதைக் கொண்டு தனது முன்னாள் தலைவன் ராகுல் காந்தியை பாஜக தலைவர் குஷ்பு சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.

“ஏன்யா இதெல்லாம் ஒரு தலைவன் செய்ற வேலையா?” – ‘முன்னாள் தலைவன்’ ராகுலை வறுத்தெடுத்த குஷ்பு!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரு தலைவர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதைத்தான் சொல்ல வேண்டும். மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பதோ, 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வதோ ஒரு தலைவருக்கான அம்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்படித்தான் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வீர்களா, தண்டால் எடுப்பீர்களா? இல்லை மீனவர்களோடு சேர்ந்து தண்ணீரில் குதிப்பீர்களா?

“ஏன்யா இதெல்லாம் ஒரு தலைவன் செய்ற வேலையா?” – ‘முன்னாள் தலைவன்’ ராகுலை வறுத்தெடுத்த குஷ்பு!

நீங்கள் என்ன நலத் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாகச் சொல்லுங்கள். அதுதான் ஒரு தலைவருக்கு அழகு” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். இப்படி தலைவனுக்காக வகுப்பு எடுக்கும் குஷ்பு தான் அன்று காங்கிரஸில் இருக்கும்போது ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க மக்கள் ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். இது ஒரு சாம்பிள் தான்!