“திமுக எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது ” : ஹெச்.ராஜா

 

“திமுக எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது ” : ஹெச்.ராஜா

தபால் ஓட்டை திமுக எதிர்ப்பது குறித்து பாஜகவின் ஹெச்.ராஜா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்கு முறையில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தபால் வாக்கு முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் விருப்பமுள்ளவர்கள் மட்டும் தபால் வாக்கு அளிக்கலாம் என விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், தபால் வாக்கு முறை கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

“திமுக எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது ” : ஹெச்.ராஜா

இந்நிலையில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஏற்கனவே தேர்தல் பணியில் உள்ளவர்கள் ரயில்வே போன்று அத்தியாவசிய பணிகளில் உள்ள 10 வகையினர் தபால் ஓட்டு போடலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ளது. கொரோனா காரணமாக 80 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என்பதை திமுக எதிர்ப்பது தோல்வி பயத்தையே காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.