“ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இல்லை”

 

“ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இல்லை”

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைகோ, சீமான் போன்றோர் குரல் கொடுக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

“ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இல்லை”

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ” தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திமுக ,விடுதலை சிறுத்தைகள், கமல் ஹாசன் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது .அதனால் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அதை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. ஆனால் அப்போது யாரும் முன்வரவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது ஒரு கால்குலேட்டர் போன்றது. தேங்காய் நார் கண்டெய்னர், டாய்லெட் கண்டெய்னர் போன்றவற்றை கண்டு மிரண்டு போயுள்ளனர் இந்த பெரியாரிஸக்காரர்கள்.

“ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இல்லை”

இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமென்றால் 2019 தேர்தலில் திமுக 38 சீட்டில் ஜெயித்தது .நாங்கள் ஒரு பத்து சீட்டில் ஆவது ஜெயிச்சிருக்க மாட்டோமா? திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் இப்படி பிதற்றுகிறார்கள். தோல்வி பயத்தால் பெண் காவலர்கள் ஹேண்ட் பேக்கை திறந்து பார்க்கின்றனர். ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இல்லை. திமுக ஆட்சிக்கு வராது தீயசக்தி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

“ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இல்லை”

தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலையை அலும்பு பிடித்து மூடினோம். தமிழகத்தில் ஆக்ஜிசன் பற்றாக்குறை உள்ளதால் வைகோ , சீமான் போன்ற தீய சக்திகள் ஆக்ஜிசன் ஆலையை திறந்து விடுங்கள் என்று தெரிவிக்க வேண்டும்” என்றார்.