‘ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியுள்ளார்’ : ஹெச்.ராஜா

 

‘ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியுள்ளார்’ : ஹெச்.ராஜா

திருமாவளவனுக்கு சமஸ்கிருதம் தெரியுமா? என்று பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியுள்ளார்’ : ஹெச்.ராஜா

திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் சர்ச்சை அளிக்கும் விதத்தில் பேசியதாக கூறப்பட்டது . இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கட்சிகளின் சார்பில் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மனுதர்ம நூலில் குறிப்பிட்டவற்றையே தான் கூறினேன்.

‘ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியுள்ளார்’ : ஹெச்.ராஜா

எனது 40 நிமிட உரை முழுமையாக பெண்கள் கேட்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தினோம் என்று அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பழிபோடுகிறார்கள் என்று விளக்கமளித்தார். அதேபோல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “திருமாவளவனுக்கு சமஸ்கிருதம் தெரியுமா? அவர் கூறியதுபோல் மனுதர்மத்தில் குறிப்பிடப்படவில்லை.
கூட்டணி உள்ளோரை பேச சொல்லி விட்டு அரசியல் ஆதாயத்திற்காக ஆதரிக்கிறார் ஸ்டாலின்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.