பாஜக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

பாஜக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை மீது பழனி நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கடந்த 6 மாத காலமாக அமலில் இருந்தது. இருப்பினும் கடந்த மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்று காவல்துறை எச்சரித்தது.

பாஜக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தடையை மீறி ஊர்வலம் சென்றதால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பழனி நகர போலீசார், பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

இதனிடையே ஈரோடு தெற்கு மாவட்ட விவசாயி அணி சார்பில் வேளாண் திருத்த சட்டங்கள் பற்றி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, மாட்டு வண்டியில் வருகை புரிந்தார். இதனால் ஊரடங்கு தடையை மீறி கூட்டம் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.