நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

 

நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

தமிழ்நாட்டில் அடுத்த 2 மாதத்திற்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழித்து அதன் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.

நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

அமைச்சரின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்யவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 8030 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 517 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர் அருகே 1455 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டு, குட்கா பொருளும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

சேலம் மாவட்ட தம்மம்பட்டி பகுதியில் கோபால் என்பவரின் தோட்டத்தில் அதிகப்படியான போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர் கெங்கவள்ளி பாஜக வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் நண்பர் என்று தெரியவந்தது.

நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் தலைமையில் அந்த தோட்டத்திற்குள் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது 101 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1455 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. இதை அடுத்து போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த கெங்கவள்ளி பாஜக வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதுக்கி வைத்திருந்த 20.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா போதை பொருள் பதுக்கல் வழக்கில் பாஜக நிர்வாகி ஒருவர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.