‘ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது’ – பாஜகவின் சி.டி.ரவி விமர்சனம்!

 

‘ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது’ – பாஜகவின் சி.டி.ரவி விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேசிய கட்சியான பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவிருக்கிறார்.

‘ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது’ – பாஜகவின் சி.டி.ரவி விமர்சனம்!

மோடியின் வருகையை எதிர்நோக்கி அதிமுகவினரும் பாஜகவினரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள். நேற்று தமிழகம் வந்த ராகுல் காந்தி, சேலத்தில் ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் பேரில் அதிமுக அரசு இயங்குவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக அரசு – மத்திய அரசு இடையே இணக்கம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். தமிழகம் முன்னேற பாஜக – அதிமுக ஆட்சி மக்களுக்கு தேவைப்படுகிறது என்றும் கூறினார்.