குண்டடிப்பட்டு காரில் சடலமாக கிடந்த ‘பாஜக பிரமுகர்’… அதிர்ச்சி சம்பவம்!

 

குண்டடிப்பட்டு காரில் சடலமாக கிடந்த ‘பாஜக பிரமுகர்’… அதிர்ச்சி சம்பவம்!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வசித்து வருபவர் மனீஷ் சவுத்ரி (38). இவர் பாஜக கவுன்சிலர். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேற சென்ற மனீஷ் சவுத்ரி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிக் கொண்டிருந்துள்ளனர். காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், மனீஷை தேடும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

குண்டடிப்பட்டு காரில் சடலமாக கிடந்த ‘பாஜக பிரமுகர்’… அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், கன்கர்கேடா பகுதியில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் காரில் மனீஷ் சவுத்ரி சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மனீஷ் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த உறவினர்கள் மனீஷை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

குண்டடிப்பட்டு காரில் சடலமாக கிடந்த ‘பாஜக பிரமுகர்’… அதிர்ச்சி சம்பவம்!

இது குறித்து விளக்கம் அளித்த போலீசார், முதற்கட்ட விசாரணையில் மனீஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்துக் கொண்ட துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளோம். மனீஷ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். பாஜக கவுன்சிலர் மனீஷ் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.