பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு!

 

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் சூழலிலும், கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் படி, தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் ஜே.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரவிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் ஜேபி நட்டாவின் தமிழகம் வருகை பாதிக்கப்பட்டுள்ளது.