மீண்டும் அன்னா ஹசாரே….ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. அழைப்பு…

 

மீண்டும் அன்னா ஹசாரே….ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. அழைப்பு…

டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்தும் பெரிய போராட்டத்தில் இணைந்து கொள்ள பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்னா ஹசாரேவுக்கு ஆதேஷ் குப்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி அரசு சுத்தமான மற்றும் நியாயமான ஆட்சி அளிப்போம் என்று ஆட்சிக்கு வந்தது.

மீண்டும் அன்னா ஹசாரே….ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. அழைப்பு…
அன்னா ஹசாரே

ஆம் ஆத்மி அரசு அரசியல் தூய்மையின் அனைத்து வரம்புகளையும் இடித்து விட்டது. ஆம் ஆத்மி திட்டமிட்ட வகுப்புவாத கலவரத்தால் டெல்லி மக்கள் பாதிக்கப்பட்டனர். சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஊழலின் புதிய பெயர் ஆம் ஆத்மி கட்சி, நாங்கள் அந்த கட்சிக்கு எதிராக நிலையாக போராடி வருகிறோம். ஆகையால் அன்னா ஹாசாரே டெல்லிக்கு வர வேண்டும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், போராட்டத்தில் எங்களை ஆதரிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மீண்டும் அன்னா ஹசாரே….ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. அழைப்பு…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இளைஞர்களின் நிவாரத்துக்காகவும், கெஜ்ரிவால் அரசாங்கத்தால் துரோகம் இழைக்கப்பட்டதாக உணரும் டெல்லி மக்களுக்காகவும் அன்னா ஹசாரேவின் குரல் மீண்டும் எழுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் அழைப்பை ஏற்று ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக அன்னா ஹசாரே குரல் கொடுப்பாரா என்று பல்வேறு தரப்பினரும் விவாதிக்க தொடங்கி விட்டனர்.