‘திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில்’.. பாஜகவினர் அராஜகம்!

 

‘திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில்’.. பாஜகவினர் அராஜகம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் பூக்கடை சந்திப்பில் திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். திமுக வேட்பாளர்கள் எல்லாரும் பாஜகவையும் அதிமுகவை விமர்சித்து பிரச்சாரம் மேற்கொள்வதை போல, இவரும் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார்.

‘திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில்’.. பாஜகவினர் அராஜகம்!

அதாவது மத்திய பாஜக அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது என்றும் தமிழக அரசு பாஜகவுக்கு துணை போகிறது என்றும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இதைக் கேட்ட செல்லத்துரை, குமாரதாஸ் ஆகிய நபர்கள் தங்கராஜுடன் சண்டை போட்டுள்ளனர். அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை கேமரா மேன், இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

வீடியோ எடுப்பதைக் கண்ட செல்லத்துரை, குமாரதாஸ் கேமராவை தூக்கி போட்டு உடைத்துள்ளனர். இது குறித்து கேமரா மேன் அப்பகுதி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.