‘அது அவங்க வேலை தான்’ ஜோதிமணியை எச்சரிக்கும் அண்ணாமலை

 

‘அது அவங்க வேலை தான்’ ஜோதிமணியை எச்சரிக்கும் அண்ணாமலை

கரூர் எம்.பி. ஜோதிமணியை வன்மையாக கண்டிப்பதாக பாஜக துணை தலைவர் அண்ணாமலை
தெரிவித்துள்ளார்.

‘அது அவங்க வேலை தான்’ ஜோதிமணியை எச்சரிக்கும் அண்ணாமலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்காக அங்குள்ள சுவர் விளம்பரங்களில் மோடியின் ஆசிபெற்ற சின்னம், ஜெயலலிதாவின் ஆசி பெற்ற சின்னம் தாமரை என எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள மோடியின் பெயரை சிலர் அழித்துள்ளதை போல் சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பரவின. இதை கண்ட கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழகத்தில் பிஜேபி வேட்பாளர்கள் தங்கள் பிரசுரங்களில் திரு.நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் போடவே அச்சப்படுகின்றனர். எம் ஜி ஆர்,ஜெயலலிதா படங்களுக்கே முன்னுரிமை. தமிழகம் #GoBackModi என்று சொல்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை, “அரவக்குறிச்சி தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் மோடிஜி பெயரை அழித்துள்ளனர். இதை கரூர் எம்பி ஜோதிமணி தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதை அவர்தான் செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .இந்த கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம் .கோபேக்மோடி கூறியதற்கு நாங்கள் பொறுமை காத்தோம்; எதற்கும் ஒரு எல்லை உண்டு “என்றார்