திமுக அரசின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

 

திமுக அரசின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கியும் தடுப்பூசி விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்து பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாருமே அழைக்காமல் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள். ஆன்மீகத்துடன் செல்ல வேண்டும் என்பதற்காகவே கோவிலை புண்ணிய ஸ்தலமாக பார்க்கின்றனர். கிரிவலம் மீதான தடையை தமிழக அரசு விரைவில் விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

திமுக அரசின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

தொடர்ந்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஈடு எதுவும் இல்லை. அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இசட் பாதுகாப்பில் இருக்கிறார். கொரோனா காலத்தில் உணவு, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை வழங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது தமிழக அரசுக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை. ஜூன் மாதம் தமிழகத்திற்கு 11 லட்சம் தடுப்பூசி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதமும் கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும். மத்திய அரசை பற்றி டெல்லியில் ஒன்று பேசுகிறார்கள் சென்னையில் ஒன்று பேசுகிறார்கள் . சொன்னதை விட கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசி வழங்கப்படும் போது அதை மறைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் திமுக அரசின் மீது குற்றஞ்சாட்டினார்.