ஈரோட்டில் 2,529 போலீசாருக்கு பிறந்தநாள், மணநாளில் விடுப்பு

 

ஈரோட்டில் 2,529 போலீசாருக்கு பிறந்தநாள், மணநாளில் விடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 2,529 போலீசாருக்கு அவர்களது திருமண நாள், பிறந்தநாளில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்.பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 2,529 போலீசாருக்கு பிறந்தநாள், மணநாளில் விடுப்பு

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாருக்கு பிறந்தநாள், திருமணநாளில் அந்தந்த மாவட்ட எஸ்பி.,க்கள் வாழ்த்துக்கள் கூறி விடுப்பு வழங்கிட 2018ம் ஆண்டு மேற்கு மண்ட ஐஜி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 3,524போலீசாருக்கு பிறந்தநாள், திருமண

ஈரோட்டில் 2,529 போலீசாருக்கு பிறந்தநாள், மணநாளில் விடுப்பு

நாள் விடுப்பு வழங்கப்பட்டது. அதேபோல், நடப்பாண்டு செப்.,மாதம் 7ம் தேதி வரை பிறந்தநாள் கொண்டாடிய 1,511பேர், திருமணநாள் கொண்டாடிய 1,018பேர் என 2,529பேருக்கு வாழ்த்துக்களுடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடர் பணியின்போது, இதுபோன்ற விடுமுறை அளித்தால் போலீசார் அவர்களது குடும்பத்துடன் மனநிறைவுடன் கொண்டாடவும், நேரம் செலவிடவும் ஏதுவாக அமைகிறது’’என்று தெரிவித்துள்ளார்.