ஸ்டாலின் நிர்வாகம் Bio-Bubble ஆபீஸ் செய்து செயல்பட வேண்டும்: ரா.அர்ஜூனமூர்த்தி

 

ஸ்டாலின் நிர்வாகம் Bio-Bubble ஆபீஸ் செய்து செயல்பட வேண்டும்: ரா.அர்ஜூனமூர்த்தி

தமிழக பாஜகவின் அறிவு சார் பிரிவின் தலைவராகவும், ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த ரா.அர்ஜுனமூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்றக்கட்சியின் தலைவராக அக்கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும்,

ஸ்டாலின் நிர்வாகம் Bio-Bubble ஆபீஸ் செய்து செயல்பட வேண்டும்: ரா.அர்ஜூனமூர்த்தி

’’மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு.. வணக்கம். தங்களின் தொடர் முயற்சியால் கிடைத்த இந்த மாபெரும் வெற்றிக்கு நீங்கள் பொருத்தமானவர். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களது புதிய தலைமை தமிழகத்தை புதிய உத்வேகத்துடன் அனைத்து தரப்பினருக்கும் இடையே நல்லிணக்கம், சமநோக்கு, பன்முனை, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நல் வாழ்வு தனை மையமாகக் கொண்டு நேர்மையாகச் செயல்படும் . நிர்வாக சிறப்பு என புதுமை படைக்கும் தலைமையாக உருவாக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் எனக்கு நம்பிக்கை உண்டு தாங்கள் அரசியல் வியூகம் அமைத்தது போல் கொரோனாவையும் எதிர்த்து அதனை அழித்து தமிழகத்தை காப்பாற்றுவீர்கள் என்றும், தமிழ்நாட்டில் ஆண் பெண் எண்ணிக்கை சமமாக அமையப் பெற்றிருப்பதால் தங்கள் ஆட்சியில் இருபாலரும் மிக்க நம்பிக்கையுடன் செயல்படவும் நல்ல பாதுகாப்புடன் வாழ்வதற்கும் ஒரு சிறப்பான நல்லாட்சியை தங்கள் வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்’’என்று தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் நிர்வாகம் Bio-Bubble ஆபீஸ் செய்து செயல்பட வேண்டும்: ரா.அர்ஜூனமூர்த்தி

இதன்பின்னர் நேற்றைய தினம், ‘’Corona விடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தங்கள் பாதுகாப்பு மிக அவசியம். உடனே உங்கள் நிர்வாகம் Bio-Bubble ஆபீஸ் செய்து செயல்பட வேண்டுகிறேன்’’என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ‘’வாழ்த்துக்கள்! தமிழக நலம், வளம் காக்க வாழ்த்துக்கள்! மக்கள் உயிர் காக்க கொரோனாவயை அழித்து, இளைஞர்கள் உயிர் வாழ வேலைவாய்ப்பை பெருக்கி, இறைவன் அருளால், நல்லாட்சி புரிய என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! ’’என்று தெரிவித்துள்ளார்.