தனியார் ஆலையில் மின்சாரம் தாக்கி பீகார் இளைஞர் பலி!

 

தனியார் ஆலையில் மின்சாரம் தாக்கி பீகார் இளைஞர் பலி!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே தனியார் ஆலையில் மின்சாரம் தாக்கி பீகார் மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாலை அருகேயுள்ள வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனபால். அவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் கல் தாயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திரிலோகி(30) என்பவர் மீது மின்சாரம் திடீரென தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் மயக்கமடைந்த திரிலோகியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தனியார் ஆலையில் மின்சாரம் தாக்கி பீகார் இளைஞர் பலி!

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆலை உரிமையாளர் தனபாலை கைதுசெய்தனர்.