சிறுமிக்கு பாலியல் தொல்லை- பீகார் தொழிலாளி போக்சோவில் கைது

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை- பீகார் தொழிலாளி போக்சோவில் கைது

தேனி

பெரியகுளம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தேவதானப்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தேனி நகரில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே மில்லில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தொழிலாளி சிக்கந்தர் சவுத்ரி என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை- பீகார் தொழிலாளி போக்சோவில் கைது

இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் சிக்கந்தர் சவுத்ரி மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. தொடர்ந்து, சிக்கந்தர் சவுத்ரி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.