“வேலையில்லாததால் அந்த வேலையில் இறங்கியது தப்பாயிடுச்சே..” -கோபத்தில் நாலு குழந்தைகளை இப்படியா பண்ணுவாங்க

 

“வேலையில்லாததால் அந்த வேலையில் இறங்கியது தப்பாயிடுச்சே..” -கோபத்தில் நாலு குழந்தைகளை இப்படியா பண்ணுவாங்க

வேலைவெட்டி இல்லாததால் வறுமையில் வாடிய ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளை கொன்ற சம்பவம் நடந்துள்ளது

பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் பால்ஹா அலிமர்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ் சவுத்ரி என்ற நபருக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறாரகள் .மேலும் அவர் எந்த வேலையும் இல்லாமலிருந்துள்ளார் .அதனால் தன்னுடைய ஐந்து குழ்நதைகளை பார்க்கும் போதெல்லாம் இவர்களை எப்படி வளர்ப்பேன் என்று கவலை பட்டுள்ளார் .மேலும் அவரின் மனைவியும் அவரை திட்டிக்கொண்டே இருந்துள்ளார் .அதனால் குடும்பத்தில் தினமும் சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது .
கடந்த திங்கள் கிழமையன்று மீண்டும் அவர்களுக்குள் பணமில்லாததால் சண்டை வந்துள்ளது .அப்போது அந்த சௌத்ரி அங்கிருந்த ஒரு கூர்மையான கத்தியை எடுத்து அவரின் குழந்தைகள் மற்றும் மனைவியை கோபத்தில் குத்தியுள்ளார் .இந்த எதிர்பாராத தாக்குதலால் அந்த குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் கடுமையான காயமுற்றார்கள் .’அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்களை அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அப்போது அந்த குழந்தைகளில் நான்கு பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர் .மேலும் அவரின் மனைவி மற்றும் ஒரு குழந்தை கவலைக்கிடமான் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் அவர்களை பாட்னாவுக்கு அனுப்பினர்.
இந்த கொலைகள் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து சவுத்ரியிடம் விசாரித்து வருகின்றனர் ..

“வேலையில்லாததால் அந்த வேலையில் இறங்கியது தப்பாயிடுச்சே..” -கோபத்தில் நாலு குழந்தைகளை இப்படியா பண்ணுவாங்க