பீகாரில் மின்னல் தாக்கி மீண்டும் 20பேர் பலி!

 

பீகாரில் மின்னல் தாக்கி மீண்டும் 20பேர் பலி!

பீகார் மாநிலத்தில் நேற்றையதினம் மட்டும் மின்னல் தாக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக போஜ்பூர் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸாரன் மாவட்டத்தில் 5 பேரும், கய்மூர் மாவட்டத்தில் 3 பேரும், பாட்னாவில் இரண்டு பேரும், பக்சரில் ஒருவர் என 20 பேர் மின்னல் தாக்கி உயிர் மாண்டுள்ளனர். இத்துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பீகாரில் மின்னல் தாக்கி மீண்டும் 20பேர் பலி!

அதேநேரம், பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். பீகாரில் மின்னல் தாக்கியதில் கடந்த 10 நாட்களில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.