சோம், ஆரியை தொடர்ந்து இறுதி போட்டிக்கு சென்றவர் இவர் தான்…!

 

சோம், ஆரியை  தொடர்ந்து  இறுதி போட்டிக்கு சென்றவர் இவர் தான்…!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

சோம், ஆரியை  தொடர்ந்து  இறுதி போட்டிக்கு சென்றவர் இவர் தான்…!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களில் இதுவரை 9 பேர் வெளியேறிய நிலையில் தற்போது 7 பேர் போட்டியில் உள்ளனர். இதில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் சோம் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். இவரை தொடர்ந்து ஆரியும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கமல் ஹாசன், அடுத்தது மக்களால் காப்பாற்றப்பட்டு இறுதிக்கட்டத்திற்கு செல்வது யார் என்று பார்க்கலாம் என்று எந்த சஸ்பென்ஸும் இல்லாமல் என்ன பாலாஜி என்று கேட்கிறார். அதற்கு பாலா முழிக்க, பேரை சொன்னாலே நானா தான் இருக்கும் என்று நினைச்சிட்டிங்களா? நீங்க நினைச்சது சரி தான் என்று சொல்ல, பாலாஜி கண்ணீர் மல்க எழுந்து நின்று நன்றி சொல்லும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

சோம், ஆரியை  தொடர்ந்து  இறுதி போட்டிக்கு சென்றவர் இவர் தான்…!

இந்த வாரம் ஷிவானி போட்டியிலிருந்து வெளியேற உள்ள நிலையில் ரியோ, ரம்யா, கேபி என மூவரும் காப்பாற்றப்படுவர். இதில் கடந்த சீசனில் பிந்து மாதவி, கவின் வெளியேறியது போல பணத்துடன் ஒருவர் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.