பிக் பாஸ் சீசன் 4 : வெளியே போனதும் என்ன பிளான் ஷிவானி?

 

பிக் பாஸ் சீசன் 4 : வெளியே போனதும் என்ன பிளான் ஷிவானி?

பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 : வெளியே போனதும் என்ன பிளான் ஷிவானி?

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 98 நாட்கள் ஆகிறது. நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா , சம்யுக்தா, ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா உள்ளிட்டோர் வெளியேறினர். தற்போது போட்டியில் ஆரி, பாலா, சோம், ரியோ, ஷிவானி, கேபி மற்றும் ரம்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இதில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் சோம் சேகர் வெற்றி பெற்று முதல் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆரியும் இந்த வாரம் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன் போட்டியாளர்களை பார்த்து வெளியில் சென்றதும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று பிளான் செய்து வைத்திருப்பவர்களை என்னென்ன? என்று கேட்க, ஷிவானி அப்படி எல்லாம் எதுவும் பிளான் பண்ணவில்லை என்று சொல்கிறார். பாலா கோவாவுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன் என்று சொல்ல, ஆரி தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட போவதாக கூறுகிறார்.

பிக் பாஸ் சீசன் 4 : வெளியே போனதும் என்ன பிளான் ஷிவானி?

நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் உறக்கத்திற்கு பின்பு காட்டுக்குள் சென்று விடலாம் என்று நினைக்கிறேன் என்று ரியோ சொல்ல, ரம்யா எனக்கு ஒரு நல்ல பாடிமசாஜ் வேண்டும் என்று சொல்லும்படியாக ப்ரோமோ முடிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய ஒருவார காலமே இருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷிவானி வெளியேற்றப்படுவது கூடுதல் தகவல்.