“நான் என்னக்கா பண்ணேன் அவர” நிஷாவிடம் கதறும் அனிதா சம்பத்!

 

“நான் என்னக்கா பண்ணேன் அவர” நிஷாவிடம் கதறும் அனிதா சம்பத்!

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நியூஸ் ரீடர் அனிதா சம்பத்திடம் வம்பிழுக்கும் விதமாக இன்றைய நிகழ்ச்சியின் 3 ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கும் பிக் பாஸ் சீசன் 4ல் முதல் நாளில் இருந்தே சண்டை தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். முதல் நாள் ஹவுஸ் மேட்ஸ் எல்லாரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்க, ஹார்ட் பிரேக் என்ற டாஸ்க் மூலம் பிரச்னை உருவானது. குறிப்பாக நடிகர் சுரேஷ் சக்கர வர்த்திக்கும் நியூஸ் ரீடர் அனிதா சம்பத்துக்கும் தற்போது சண்டை மூண்டுள்ளது.

“நான் என்னக்கா பண்ணேன் அவர” நிஷாவிடம் கதறும் அனிதா சம்பத்!

கடந்த 2 நாட்களாக அவர்கள் சண்டை போடுவதே வெளியாகி வந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் 3ஆவது புரோமோவிலும் அனிதா – சுரேஷ் மோதலே தொடர்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், ‘சுரேஷ் சார் நீங்க இல்லன்னா நான் குக்கிங் டீமில் இல்ல என சனம் ஷெட்டி சொல்ல, அதையே ரேகாவும் சொல்கிறார். அதற்கு சுரேஷ், உங்க யாருடனும் எனக்கு பிரச்னை இல்லை, அனிதா சம்பத் கூட தான் பிரச்னை என அனிதாவை டார்கெட் செய்கிறார்.

“நான் என்னக்கா பண்ணேன் அவர” நிஷாவிடம் கதறும் அனிதா சம்பத்!

இதனால் கடுப்பான அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம், நான் என்னக்கா பண்ணேன்.. அவரு வெளில வந்து என் கூட தான் பிரச்னை என சொல்றாரு என கண் கலங்கி கூறுவது போல புரோமோ முடிகிறது. ஏக போகமாக சண்டை நடக்கும் பிக் பாஸ் வீடு தற்போது சண்டை இல்லாமல் சாந்தமாக இருப்பதால் அனிதா – சுரேஷ் மோதலையே புரோமோவில் போட்டு வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.