“பீரோவுல இருந்து பத்திரத்தை எடுத்தது யாருடா?”.. கடுப்பான பாலா; நக்கலடிக்கும் சோம்!

 

“பீரோவுல இருந்து பத்திரத்தை எடுத்தது யாருடா?”.. கடுப்பான பாலா; நக்கலடிக்கும் சோம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட பத்திரத்தை பீரோவில் இருந்து யாரு எடுத்தது என பாலா கோபத்துடன் கேட்பது போல இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

“பீரோவுல இருந்து பத்திரத்தை எடுத்தது யாருடா?”.. கடுப்பான பாலா; நக்கலடிக்கும் சோம்!

புரோமோவில், ஒரு கவரில் இருந்து பாலா எதையோ எடுக்க, அதை நான் பார்த்து விட்டேன் என சிரித்துக் கொண்டே சொல்கிறார் ரம்யா பாண்டியன். குரூப்- ஆ சேர்ந்து நீங்க ஏதோ செய்யுறீங்க என்றும் சொல்கிறார். அதற்கு பாலா, நாங்க ஏதும் பண்ணல என பதில் அளிக்கிறார். இதை தொடர்ந்து பாலாவிடம் கேபி, நீங்க 4 பேரும் தான் பத்திரத்தை திருடி இருக்கீங்க என்ற சொல்ல கடுப்பான பாலா, ‘நான் எடுக்கும் போது அவங்க பாத்துட்டா எல்லாரும் சேர்ந்து பண்ணதா அர்த்தம் இல்ல. பீரோவுல இருந்து அந்த பத்திரத்தை எடுத்தது யாருடா?’ என கத்துகிறார். அதற்கு சோம் நக்கலாக சிரிப்பது போல புரோமோ முடிகிறது.

“பீரோவுல இருந்து பத்திரத்தை எடுத்தது யாருடா?”.. கடுப்பான பாலா; நக்கலடிக்கும் சோம்!

ஹவுஸ்மேட்ஸ்க்கு நேற்று கொடுக்கப்பட்ட ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்ற டாஸ்க்கின் தொடர்கதை தான் இன்று. பொதுவாக ஒரு பத்திரத்தை கொடுத்து விட்டு, அதனை சோம் சேகரை வைத்து திருடவும் சொல்லி விட்டார் பிக் பாஸ். அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த திருடன் டாஸ்க்கை, கச்சிதமாக முடித்து விட்டார் சோம் சேகர்.

“பீரோவுல இருந்து பத்திரத்தை எடுத்தது யாருடா?”.. கடுப்பான பாலா; நக்கலடிக்கும் சோம்!

ஆனால் பாலா தான் திருடன் என ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சொல்ல, கடுப்பான பாலா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார். பிக் பாஸ் சீசன் 4ல் கோபத்துக்கு பெயர் போன பாலாவை, தூண்டி விடவே இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.