“குறையை ரிஸீவ் பண்ணிக்குற பக்குவம் இருந்தாலே போதும்” மீண்டும் மோதிய ஆரி – ரம்யா

 

“குறையை ரிஸீவ் பண்ணிக்குற பக்குவம் இருந்தாலே போதும்” மீண்டும் மோதிய ஆரி – ரம்யா

பிக் பாஸ் சீசன் 4 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“குறையை ரிஸீவ் பண்ணிக்குற பக்குவம் இருந்தாலே போதும்” மீண்டும் மோதிய ஆரி – ரம்யா

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 96 நாட்கள் ஆகின்றன. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் ரியோ , ஆரி, பாலா, சோம், ரம்யா, ஷிவானி மற்றும் கேபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வரும் 17 ஆம் தேதியுடன் போட்டி முடிவடையவுள்ள நிலையில், தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆவது டாஸ்க் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஆரி, ரம்யா வந்து ஒரு விஷயம் சொன்னாங்க சேஃப் கேம் என்று சொல்ல ரம்யா குறுக்கிட்டு சேஃப் கேம் நான் சொல்லல என்று சொல்ல, நான் பேசும் போது நடுவுல பேசாதீங்க; நீங்க யார் பேசும் போதும் நான் அமைதியா தான் இருந்தேன் என்று ஆரி சொல்ல, ரம்யா ,ரியோ இருவரும் கீழே குனிந்து கொள்கின்றனர். அப்போது ஆரி, இதுதான் பிரச்சினை ஒருத்தங்க குறையை சுட்டிக்காட்டும் போது அதை ரிஸீவ் பண்ணிக்குற பக்குவம் இருந்தாலே போதும் என்று சொல்லும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.