பிக் பாஸ் சீசன் 4 : ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

 

பிக் பாஸ்  சீசன் 4 : ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

பிக் பாஸ் சீசன் 4 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்  சீசன் 4 : ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 4 ஆவது நாளான இன்றும் அனிதா – சுரேஷ் இடையான மோதலே தொடர்கிறது. ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவராக வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசும் டாஸ்க் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இன்று அனிதா சம்பத் பேசுவது போல முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது.

பிக் பாஸ்  சீசன் 4 : ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது, நான் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா சாரி… அப்படி இல்லன்னா அதிகம் ஹர்ட் பண்ணுறேன். நான் கடுமையான போட்டியாளரா இருந்து போராடுவேன். யார் ஜெயிச்சாலும் நான் ஜெயிச்ச மாதிரி என்று கூறுகிறார். ஒருபுறம் அனிதா சம்பத், அவருக்கு ப்ரோமோவுல வர ஆசையா இருக்கு. என்னபத்தி பேசுனா அவரும் சேர்ந்து ப்ரோமோவுல வருவாரு. அவர் பேமஸ் ஆகலாம்னு ட்ரை பண்ணிட்டு இருக்காரு என்று கூறுவது போல அந்த ப்ரோமோ முடிகிறது.

பிக் பாஸ் ஆரம்பித்து 4 நாட்கள் தான் ஆகிறது. கன்டெட் இனிமே தான் கிடைக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரியும். இருந்தாலும் ஆளாளுக்கு கன்டென்ட் கிரியேட் பண்ண ஆசைப்பட்டு சுட்ட தோசையே மீண்டும் சுட்டு கொண்டிருக்கிறார்கள் என்று நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்து வருகின்றனர்.