ஷிவானி ஓகே சொல்லிட்டாளா? பாலாவை கிண்டல் செய்யும் சம்யுக்தா : அடுத்த காதல் காவியம்!

 

ஷிவானி ஓகே சொல்லிட்டாளா? பாலாவை கிண்டல் செய்யும் சம்யுக்தா : அடுத்த காதல் காவியம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஷிவானி ஓகே சொல்லிட்டாளா? பாலாவை கிண்டல் செய்யும் சம்யுக்தா : அடுத்த காதல் காவியம்!

பாலா – அர்ச்சனா இடையே மோதலில் பாலா குழந்தை போல் அழுதுவிட்டார். பொதுவாக அடுத்தவரை திட்டியே பழகிய பாலா தற்போது ஒருவர் திட்ட கேட்க அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அழுவதையே முதல் ப்ரோமோ காட்டுகிறது. இருப்பினும் பாலாவின் மற்றொரு முகம், ஷிவானியை காணும் போது வெளிப்படுகிறது என்பது பிக் பாஸ் ரசிகர்களின் கருத்து

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ‘பாலா ஷிவானியிடம், ரொம்ப எமோஷனலா முடிஞ்சிடுச்சி அந்த விஷயம் என்று சொல்ல அதற்கு ஷிவானி நீங்க அழுதுருப்பீங்கன்னு தெரியாது என்று கூறுகிறார். அதற்கு பாலா, நம்ம திமிரா பேசுறதுனால எல்லாத்துக்கும் திமிரா தான் பேசுவாங்கன்னு செட் பண்ணிட்டாங்க என்று பாலா பேச, நீங்க நேர்மையா இருக்கீங்க. அத சொல்லுற விதம் திமிரா இருக்கு, அது உங்க ஸ்டைல் என்று முட்டுக்கொடுக்கிறார் . பின்னர் சம்யுக்தா பாலாவிடம் , ஷிவானி ஓகே சொல்லிட்டாளா? என்று கேட்க ஷாக்கான பாலா, தெளிவா சொல்லுங்கப்பா என்று சிரிக்கிறார்’ இப்படியாக இரண்டாவது ப்ரோமோ முடிகிறது.