ஜெயிலுக்குள் பாலா ; சோலோவாக சோகத்துடன் இருக்கும் ஷிவானி : வச்சி செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

 

ஜெயிலுக்குள் பாலா ; சோலோவாக சோகத்துடன் இருக்கும் ஷிவானி : வச்சி செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயிலுக்குள் பாலா ; சோலோவாக சோகத்துடன் இருக்கும் ஷிவானி : வச்சி செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 47 ஆவது நாளான இன்று பாலா, சுசித்ரா இருவரையும் ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்புகின்றனர் சக ஹவுஸ்மேட்ஸ். மணிக்கூண்டு டாஸ்க்கில் கடைசியாக வந்த ரம்யா , பாலா மற்றும் சுசித்ரா டீமில், இருவரை ஜெயில் என்று சொல்லக்கூடிய ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்ப பிக் பாஸ் சொல்ல, சந்தேகமே இன்றி பாலா, சுசித்ரா இருவரும் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஜெயிலுக்குள் பாலா ; சோலோவாக சோகத்துடன் இருக்கும் ஷிவானி : வச்சி செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ, ஷிவானி தான். இரட்டை வாழை போல பாலா உடன் சுற்றி வந்த ஷிவானி, தாடி வைக்காத தேவதாஸ் மாதிரி சோகமாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஷிவானி ஓய்வெடுக்கும் அறை வாசலில் சோகத்துடன் நிற்க, காலேஜுக்கு புதிதாக வந்த ஜூனியரை கிண்டல் செய்வது போல வெறுப்பேற்றுக்கிறார்கள் ரம்யா & கோ . இருப்பினும் பயில்வான் பாலா ஜெயிலுக்குள் இருந்தப்படி ஷிவானிக்கு ஆறுதல் கூறுகிறார். இப்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.