“புரணி பேசுபவர்களை மக்கள் செருப்பால அடிப்பாங்க” : அறந்தாங்கி நிஷா காரசார விவாதம்!

 

“புரணி பேசுபவர்களை மக்கள்  செருப்பால அடிப்பாங்க” :  அறந்தாங்கி நிஷா காரசார விவாதம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“புரணி பேசுபவர்களை மக்கள்  செருப்பால அடிப்பாங்க” :  அறந்தாங்கி நிஷா காரசார விவாதம்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களின் திறமையை சோதிக்கும் , வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸின் பொறுமையை சோதிக்கும் வகையில் நாடா? காடா? டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதை ஹவுஸ் மேட்ஸ் சிறப்பாக செய்து முடித்தாலும், உரசலுக்கும் மோதலுக்கும் பஞ்சமில்லை.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் ஒரு ஆனந்த குடும்பம் vs பிக் பாஸ் வீடு ஒரு போட்டிகளம். அதில் பேசும் வேல்முருகன், இந்த குடும்பம் இருந்தால் தான் விளையாட்டு, விளையாட்டு இருந்தால் தான் போட்டி என பிக் பாஸ் ஒரு ஆனந்த குடும்பம் டாப்பிக்கில் பேச, அனிதா, அன்பு ; ஒருதாய் பிள்ளை அப்படின்னு சொன்னீங்கல, அப்புறம் ஏன் யாராது குத்துனா அழறீங்க என்று கேட்கிறார்.

“புரணி பேசுபவர்களை மக்கள்  செருப்பால அடிப்பாங்க” :  அறந்தாங்கி நிஷா காரசார விவாதம்!

பின்னர் பேச வரும் ரியோ, இந்த போட்டி களத்துல நம்ம தேவைக்காக தான் வந்தோம் என்று சொல்ல, இறுதியாக பேச வரும் நிஷா, புரணி பேசுவது அழகு சார். ஒருவருடைய உள்ளத்தையும், உருவத்தையும் உடைக்கும் போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புரணியை தான் வெளியில் இருக்கும் மக்கள் செருப்பால் அடிப்பாங்க என்று கூறுவது போல ப்ரோமோ முடிகிறது.இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு அர்ச்சனா நடுவராக உள்ளார்.