“மீண்டும் நாடா? காடா டாஸ்க்” – கண்டென்ட் கொடுக்க முடியாமல் திணறும் பிக் பாஸ்

 

“மீண்டும் நாடா? காடா டாஸ்க்” – கண்டென்ட் கொடுக்க முடியாமல் திணறும்  பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“மீண்டும் நாடா? காடா டாஸ்க்” – கண்டென்ட் கொடுக்க முடியாமல் திணறும்  பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 101 நாட்கள் ஆகிறது. தற்போது வரை இறுதிப்போட்டிக்கு 6 பேர் தேர்வாகியுள்ளனர்.போட்டி முடிய இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் வீட்டுக்குள் எவிக்ட் ஆன ஹவுஸ்மேட்ஸும் வந்துள்ளார். இதில் ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுசித்ரா, ஆஜித், அனிதா, ஷனம் ஷெட்டி, நிஷா, அர்ச்சனா ஆகியோர் வந்துள்ளனர். இதில் சுரேஷ் சக்க்ரவர்த்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸுக்கு நாடா? காடா டாஸ்க் கொடுக்கப்படுகிறது. சொர்க்கபுரி ராஜ குடும்பமும், மாயபுரி அரக்க குடும்பமும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். சிலையா மாறுன நபரை சிரிக்க வைச்சா மட்டும் போதும் என்று சொல்ல, கேபி ராஜ குடும்பத்தில் இருந்து சென்று சிலையாக நிற்கிறார். இதில் ராஜகுடும்பத்தில் அர்ச்சனா, சம்யுக்தா, சுசித்ரா, ரமேஷ், ஆரி , கேபி உள்ளனர். இப்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

“மீண்டும் நாடா? காடா டாஸ்க்” – கண்டென்ட் கொடுக்க முடியாமல் திணறும்  பிக் பாஸ்

கடந்த சீசன்கள் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி படு போராக தான் சென்றது. 100வது நாள் வரை சண்டை போட்டுக்கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸிடம் சுவாரஸ்சியத்தை எதிர்பார்க்க முடியாது என்பது பிக் பாஸுக்கு தெரிந்துவிட்டது. அதனால் வெளியில் சென்றவர்களை அழைத்து வந்து டாஸ்க் கொடுத்து ஒப்பேற்ற பார்க்கிறார்.