பாலா – ஷனம் இடையே மோதல் : ஷனம் ஷெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி

 

பாலா – ஷனம் இடையே மோதல் : ஷனம் ஷெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய  ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 பேர் வெளியேறிய பின்பும் 16 போட்டியாளர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த சுசித்ரா, தனித்தனியே பலரிடமும் கொளுத்தி போட்டார். அனிதா செய்வது எல்லாமே சரி; கடுமையான போட்டியாளர் என்பதால் உன்னை தட்டிவைக்க பார்க்கிறார்கள் என்று சொல்லி உசுப்பேற்றியது.

பாலா – ஷனம் இடையே மோதல் : ஷனம் ஷெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய  ஆரி

அர்ச்சனா மற்றவர்களை பேச விடாமல் இருப்பது. பாலாவை சென்டிமெண்ட்டாக பேசி அவருக்கு எதிராக கேம் ஆடவிடாமல் செய்வது என பல விஷயங்களை கூறி அதிர வைத்தார். இப்படி சுரேஷ், பாலா என பலரிடமும் சுசித்ரா தான் வந்த வேலையை சிறப்பாக செய்து முடித்தார்.

https://twitter.com/vijaytelevision/status/1323473796913795073

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில், விவாத மேடை போட்டி நடக்கிறது. இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் வீட்டிலிருக்கும் மற்றொரு ஹவுஸ்மேட் உடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பதிவு செய்ய வேண்டும். பின்பு அதை விவாதித்து தீர்வு காண இந்த வீடு விவாத மன்றமாக மாறப்போகிறது என்றுஅர்ச்சனா கேம் ரூலை படிக்கிறார் .

பாலா – ஷனம் இடையே மோதல் : ஷனம் ஷெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய  ஆரி

அப்போது பாலா, சுரேஷ் இருவரும் ஷனம் ஷெட்டிக்கு எதிராக புகார் அளிக்கின்றனர். ஷனம் பாலாவுக்கு எதிரராக புகார் வைக்க, சம்யுக்தா ஆரிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இந்த போட்டியில் நடுவராக சுசித்ரா உள்ளார்.