பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா சம்பத்… கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ்

 

பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா சம்பத்… கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா சம்பத்… கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் 4 நாட்களே உள்ளது. தற்போது இறுதி போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா மற்றும் கேபி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதுவரை அர்ச்சனா, நிஷா, ரேகா, ரமேஷ், சம்யுக்தா, சுசித்ரா, ஆஜித் மற்றும் வேல் முருகன் ஆகியோர் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், அனிதா சம்பத் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அனிதா சம்பத்தின் அப்பா சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவாரா ? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அனிதா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். அவரை ஹவுஸ்மேட்ஸ் கட்டியணைத்து ஆறுதல் கூறும் படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.