“நியூஸ் ரீடர் கிட்ட பேசினா எச்சில் தெறிக்கும்” : நடிகர் சுரேஷிடம் எகிறிய அனிதா சம்பத்

 

“நியூஸ் ரீடர் கிட்ட பேசினா எச்சில் தெறிக்கும்” : நடிகர் சுரேஷிடம் எகிறிய அனிதா சம்பத்

பிக் பாஸ் சீசன் 4இல் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“நியூஸ் ரீடர் கிட்ட பேசினா எச்சில் தெறிக்கும்” : நடிகர் சுரேஷிடம் எகிறிய அனிதா சம்பத்

பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பமாகி இரண்டு நாட்களே ஆன நிலையில் சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி செல்கிறது. முதல் நாளே டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போட அது இன்னமும் கொளுந்து விட்டு எரிகிறது. இதில் ஷிவானி டார்க்கெட் செய்யப்பட அவருக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய தொடங்கியுள்ளனர்.

“நியூஸ் ரீடர் கிட்ட பேசினா எச்சில் தெறிக்கும்” : நடிகர் சுரேஷிடம் எகிறிய அனிதா சம்பத்

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவில், ‘நான்லாம் நியூஸ் ரீடர் கிட்ட பேசவே மாட்டேன், பேசுனா எச்சில் தெறிக்கும்’என்று சுரேஷ் கூறியதாக அனிதா அவரிடம் மல்லுக்கட்டுகிறார் . நடிகர் சுரேஷும் தான் அப்படி கூறவில்லை என்று பதிலுக்கு அனிதாவிடம் வாக்குவாதம் செய்வது போல் அந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

முன்னதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஷிவானி பாலா, சோம் மற்றும் ஆரியிடம் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். 2வது ப்ரோமோவில் அனிதா சம்பத் நிஷாவை தனது அம்மாவுடன் தொடர்புப்படுத்தி எமோஷனலாக பேசியது குறிப்பிடத்தக்கது